சனி, 23 நவம்பர், 2013

ஒரு சிப்பாயின் தடத்தில் ...

நண்பர்களே  ...வணக்கம் ...

நலம் ..,நலமா ..?

போன வாரமே வந்து இருக்க வேண்டிய இந்த பதிவு சில காரணங்களால் தள்ளி விட்டது .தீபாவளிக்கு வந்த நமது காமிக்ஸ் மலர்கள் இரண்டில் கிராபிக் நாவல் ஆன " ஒரு சிப்பாயின் சுவடுகளில்   " ஒன்று .அந்த இதழை பற்றிய எனது பக்க பார்வை (மட்டும் ) இங்கே காணலாம் . முதலில் இந்த புத்தகத்தை படிக்காமல் முழுவதுமாக புரட்டி பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம் தான் ஏற்பட்டது .காரணம் ஆசிரியரின் அந்த நீ......ண்ட ஹாட் -லைன் .இணையத்தில் வரும் பலருக்கு அதில் பாதி ஏற்கனவே அறிந்த செய்தி தான் என்றாலும் புத்தகத்தில் படிக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான் .நமக்கே இப்படி என்றால் இணையம் வராத பலருக்கு எப்படி இருக்கும் .?அதுவும் 2014 விளம்பரத்துடன் வந்த அந்த இதழை பாராட்டாமல் இருக்க முடி யுமா என்ன ?

     அதே சமயம் டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் வந்த அதே அட்டைப்பட மங்கள் இதிலும் வந்தது வருத்தமே .இணையத்தில் வந்த அட்டைபடம் பாராட்டை பெற்ற போதும் புத்தகத்தில்...... நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் ஓவியம் மங்கலாக வந்ததில் புத்தகத்துக்கு ஒரு மாற்று குறைவே ..!இதன் அட்டைபடம் கீழே காணலாம் .
அட்டைப்படம்  
இணையத்தில் வந்த இந்த அட்டைப்படம் புத்தகத்திலும் இதே போல வந்திருந்தால் இன்னும் மெருகு கூடி இருக்கும் என்பது உண்மை .

       அடுத்து கதைக்கு செல்லலாம் .முழுவதுமாக சொல்லலாம் தாம் .ஆனால் படிக்காதவர்களும் படிக்கலாம் என்றாலும் படிக்காதவர்கள் பத்தி ,பத்தி யாக தாண்டி செல்லும் நிலை இருப்பதால் அதன் கரு மட்டும் .:-). முழுவதும் கதையை படிக்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக நண்பர் பெங்களூர் கார்த்திக் அவர்களின் "blade beedia .blogs pot .com ."என்ற இணைய தள முகவரிக்கு சென்றால் காணலாம் .

           வீட்டிலும் ,பணியிலும் ,பொருளாதாரத்திலும் பின் தங்கி விட்ட ஒரு தொலை காட்சி நிருபர் இழந்த புகழை மீட்டெடுக்க... என்ன ஆனார் என்றே தெரியாத ஒரு படை வீரனை தேடி செல்கிறார் .அதற்காக அவர் படும் இன்னல்கள் ,பொருளாதார இழப்பு மற்றும் அந்த படை வீரனின் கதி என்ன ஆயிற்று ,கடைசியில் அந்த நிருபரின் கதி என்ன ஆயிற்று என்பது புத்தகம் வாங்கி படித்தால் தாங்கள் அறிந்து கொள்ளலாம் .உண்மையில் இந்த கதையை நான் முதலில் ஆர்வமாக தான் படிக்க ஆரம்பித்தேன் .காரணம் ஆசிரியரின் "இது அழுகாச்சி காவியம் அல்ல " என்ற முன்னுரை தான் .ஆனால் அந்த படை வீரனுக்கு ஏற்பட்ட நிலை ,நிருபனுக்கு ஏற்படும் நிலை என கதை ஒரு மாத்ரி "சோகத்தை "நோக்கி படை எடுக்க நான் மூலையை நோக்கி படை எடுக்க தொடங்கினேன் .என்ன தான் "மாறுபட்ட படைப்பு "என்றாலும் கிராபிக் நாவல் என்றால் "அழுகாச்சி காவியம் "தான் என்ற என் மன நிலை 100 சதவீதம் உண்மை தான் என்பதை நிருபத்திதது .

         ஆனால் இப்பொழுது ஆசிரியர் அறிவித்த "கிராபிக் நாவல் "வரிசைக்கான கதைகளின் விளம்பர அறிவிப்பு எனது எண்ணத்தை மாற்றி விடும் நிலைமையில் இருப்பதால் அடுத்த கிராபிக் நாவலுக்கான கதைகளை ஆவலுடன் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையையும் இங்கே சொல்லி விடுகிறேன் .எனது எதிர் பார்ப்பு உண்மையாகுமா  அல்லது கனவாகுமா என்பது அடுத்த கிராபிக் நாவலில் வரும் கதையை பொறுத்து தான் அமையும் .

        அதே சமயம் கிராபிக் நாவலின் ஆதரவாளர்கள் எனது நிலை பாட்டை ஆசிரியர் வசம் கூறும் பொழுது என் மேல் வருத்தம் கொள்வது அறிய முடிகிறது .சோக கதை என்றால் அது உனக்கு நடந்ததா என்ன ? படித்து விட்டு விட்டு விடுவது தானே எனவும் என்னலாம் .என்னை பொறுத்த வரை பகலில் எவ்வளவு கஷ்ட பட்டாலும் இரவில் அமைதி யான மன நிலையில் உறங்க நினைக்கிறன் .நான் பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் தான் படிக்க ஆரம்பிக்கிறேன் .அப்பொழுது நாம் ஒரு சிறந்த கமர்சியல் கதையோ ,அல்லது ஒரு காமெடி கதையோ படிக்கும் பொழுது உறங்கும் முன்னரோ ,உறங்கிய பின்னரோ ஒரு வித ஆனதத்தில் உறங்க முடிகிறது .அதே சமயம் "ஒரு அழுகாச்சி காவியத்தை " இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை  தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு .எனவே தான் எனது எதிர்ப்பை உடனடியாக கூறி விடுகிறேன் .நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன .அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் "புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா ?

                     மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ......

திங்கள், 4 நவம்பர், 2013

காமிக்ஸ் தீபாவளி - ஒரு விமர்சன பார்வை ...

நண்பர்களே ....வணக்கம் .
நலம் .நலமா ..?

காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி மறக்க முடியாத ஒன்று .வெகு நாட்களுக்கு பிறகு   பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஒரு குண்டு புத்தகத்தை ,அதுவும் "காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ...டெக்ஸ் வில்லர் "அவர்களின் இரண்டு சாகச கதைகளை ஒரே இதழில் வெளி இட்டு கூட ஒரு "கிராபிக் நாவலையும் "கொண்டு வந்து இந்த தீபாவளியை மறக்க முடியாமல் செய்து விட்டார்கள் .சொன்ன படி "ஜானி "அவர்களின் இரு மறு பதிப்பு கதைகளையும் கொண்டு வந்து இருந்தால் நண்பர்கள் இன்னும் ஒரு அணுகுண்டை வெடித்த சந்தோசத்தை அனுபவித்து இருப்பார்கள் .ஆனாலும் அந்த குறையை டெக்ஸ் இன் குண்டு புத்தகம் நண்பர்களை மறக்கடிக்க செய்ததா ? ஒன்றுக்கு இரண்டாக வந்த டெக்ஸ் சாகசங்கள் நண்பர்களை சந்தோஷ படுத்தியதா ?
அட்டைப்படமும் ,சித்திர தரமும் ,கதை களமும் காமிக்ஸ் ரசிகர்களை திருப்தி படுத்தியதா ?"டெக்ஸ் "ரசிகனாக இல்லாமல் காமிக்ஸ் ரசிகனாக ஒரு விமர்சன பார்வையாக டெக்ஸ் இன் "தீபாவளி மலர் "எப்படி ? பார்க்கலாமா நண்பர்களே ....

டெக்ஸ் தீபாவளி மலர் -அட்டைப்படம் :
  

இந்த தீபாவளி மலரின் அட்டைப்படத்தை ஆசிரியர் இணைய தளத்தில் வெளி இட்ட போதே மிக பெரும் வரவேற்ப்பை பெற்றது .எப்பொழுதும் இணையத்தில் வெளி இடும் அட்டைப்படத்தை விட புத்தகத்தில் இன்னும் கலர் "டார்க் "ஆக வந்து அதகள படுத்தும் .இந்த முறை இணையத்தில் வந்ததை விட கலர் சிறிது டல்லாக படுவது எனக்கு மட்டும் தானா ?ஆனாலும் டெக்ஸ் இன் அந்த அதிரடியான போஸ் ,இளமையான தோற்றம் என்று இந்த முறை ஓவியர் கொண்டு வந்து அசத்தி விட்டார் .இந்த முறை முன் ,பின் என இரண்டு பக்க அட்டைப்படமும் அசத்தல் .வாழ்த்துகள் ஓவியர் சார் ...

       இந்த தீபாவளி மலரில் இடம் பெற்ற இரண்டு கதைகள்  1) மரண தேசம் மெக்ஸிகோ   2)நீதியின் நிழலில் .....இரண்டு கதைகளின் ஓவியமும் பழைய டெக்ஸ் வில்லரை கொண்டு வந்து கண் முன் நிறுத்தியது .சித்திர தரம் அசத்தியது போல கதைகளும் நண்பர்களை அசத்துமா ? வாருங்கள் பார்க்கலாம் .

"மரண தேசம் மெக்ஸிகோ " கதை : ( படிக்காதவர்களும் படிக்கலாம் ) :

            நகரில் சில நாட்களாக சிறுவர்கள் திடீர் ,திடீர் என காணமல் போக பாதர் மாத்யூ அவர்களின் வேண்டுகோள் படி அவருக்கு வேண்டிய சிறுவர்களை கண்டு பிடிக்க டெக்ஸ் மற்றும் அவர் தோழர் கார்சன் இருவரும் நகருக்கு வருகிறார்கள் .அங்கு வண்டி ஓட்டி யின் மூலம் "நோகா லஸ் "என்ற இடத்தில உள்ள பார் உரிமையாளர் க்கு கடத்தியவனின் பெயர் தெரியும் எனவும் ,தனக்கு கடத்தியவன் "மாறு கண் "உடையவன் என்பது மட்டுமே அறிந்தவன் எனவும் அறிந்து கொள்கிறார்கள் .உடனடியாக நோகாலஸ் செல்லும் டெக்ஸ் &கார்சன் அந்த பார் உரிமையாளரை  கண்டு பிடித்து "தங்கள் " பாணியில் விசாரிக்க  அவரின் மகள்... தனது தந்தை எதையும் அறியாதவர் என்றும் அந்த மாறு கண்ணனின் பெயர் "பால் மென்டிஸ் "என்றும் அவன் தங்கி இருக்கும் இடத்தையும் கூற உடனடியாக அங்கு செல்ல முற்படுகிறார்கள் .அதை அறிந்த பால் மென்டிஸ் இன் கையாளும் ,நகரின் ஷெரிப் ம் ஆனவன் அவர்கள் வருகையை தந்தி மூலம்  அறிவித்து விடுகிறான் .

        அதன் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை சாமர்த்தியமாக சமாளித்து நகருக்கு சென்று அவன் இருக்கும் இடத்தை அடைகிறார்கள் .அவர்கள் வருவதை அறிந்த பால் மென்டிசின் கூட்டாளி அவனை எச்சரித்து ..,உடனடியாக அவர்களை சுட்டு கொள்ள முற்பட மீண்டும் தங்கள் திறமையால் இருவரையுமே சுட அவர்கள் இறந்து விடுகிறார்கள் .இறந்து விடும் முன் அவன் குழந்தைகளை "டான் மானுவல் " என்பவனிடம் விற்று விட்டதை கூறி விடுகிறான் .பால் மெண்டிசை கொண்ட குற்றத்திற்காக ஷெரிப் அவர்களை கைது  செய வரும் பொழுது உள்ளூர் பத்திரிக்கை ஆசிரியரால் விடிவிக்க படுகிறார் .மேலும் டான் மானுவல் என்பவனை பற்றியும் ,அவனின் அசாத்திய செல்வாக்கையும் கூறுவதுடன் அவனின் தங்க சுரங்கத்திற்கு வேலை செய்யவே சிறுவர்கள் கடத்த படுவதையும் ,அவனுக்கு என்று தனி படையும் கொண்ட கொண்ட அவனின் சுரங்கத்திற்கு செல்வது மிக கடினமான காரியம் என்றும் ,அப்படி சென்றாலும் மீண்டு வருவது நடக்காத விஷயம் என்றும் கூறுகிறார் .

     அப்படி பட்ட சுரங்கத்திற்கு டெக்ஸ் &கார்சன் செல்ல முடிந்ததா ? அங்கு கொடுமை படுத்த படும் சிறுவர்களையும் ,அடிமைகளையும் அவர்களால் காப்பாற்ற முடிந்ததா ? டான் மானுவல் கதி என்னவாயிற்று  ? இந்த விறு ,விறுப்பான கதை முடிவை இனி வெள்ளி திரையில் சாரி தங்க புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் .

"நீதியின் நிழலில் " கதை : (படிக்காதவரும் படிக்கலாம் ):

      ராணுவ கோட்டையில் நான்கு நாளில் தூக்கில் தொங்க விட இருக்கும் செவ்விந்தியனை உயிரோடு கொண்டு செல்ல டெக்ஸ் &கார்சன் கோட்டைக்கு வருகிறார்கள் .அவர்கள் வரும் சமயத்தில் செவ்விந்தியனின் தோழன் மூலம்  அவன் தப்பித்து விடுகிறான்   .உடனடியாக அந்த செவ்விந்தியனை உயிரோடு பிடிக்க டெக்ஸ் &கார்சன் செல்கிறார்கள் .வழியில் ஏற்படும் சிறு விபத்தால் கார்சன் மீண்டும் கோட்டைக்கு திரும்புகிறார் .தனியாக அவனை தேடி செல்லும் டெக்ஸ் க்கு போட்டி யாக தப்பி சென்ற அவனை தனி பட்ட விரோதத்தால் அவனை கொன்று பிடித்து வருவேன் என்று ராணுவத்தில் இருக்கும் "லிபார்ஜ் "என்பவனும் கிளம்புகிறான் .டெக்ஸ் தப்பி சென்ற அந்த கைதியை "லிபார்ஜ் "இடம் இருந்து உயிரோடு காப்பாற்ற முடிந்ததா ? தப்பி சென்ற கைதியின் தவறு என்ன  ?
டெக்ஸ் அவனை மீண்டும் சிறைக்கு கொண்டு சென்றாரா ? அடிபட்ட கார்சனின் கதி என்ன ?  
       
     விடை தெரிய உடனடியாக " லயன் தீபாவளி மலரை " வாங்கி படிக்கவும் .காமிக்ஸ் ரசிகர்களுக்கு அதுவும் கமர்சியல் ரசிகர்களுக்கு இது மாபெரும் விருந்து என்பது மறக்க முடியாத உண்மை .இது "டெக்ஸ் " ரசிகர்களுக்கு மட்டுமான கதை அல்ல .அனைவரும் விரும்பும் " ரஜினி "பட ஸ்டைல் கதை .எனவே காமிக்ஸ் படிக்கும் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு மலர் தான் இந்த தீபாவளி மலர் .



ரஜினியை எதிர்ப்பவர்கள் கூட அவரின் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள் .அது இந்த இரண்டு டெக்ஸ் கதைகளுக்கும் பொருந்தும் .
இப்படி பட்ட அருமையான புத்தகத்தில் குறை என்று ஒன்று உண்டா ?
கண்டிப்பாக உண்டு .

    நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த இந்த தீபாவளி மலரை விலை சிறிது கூடி இருந்தாலும் தரமான தாளில் வெளி இட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .ஆனால் இனி பேசி என்ன பயன்  ? மீண்டும் விரைவில் 

        "ஒரு சிப்பாயின் சுவடுகளில் " தடம் பதிப்போம் நண்பர்களே .
       
                                வணக்கம் .....