செவ்வாய், 30 ஏப்ரல், 2013

காமிக்ஸ் நினைவலையில் ...

காமிக்ஸ்  நண்பர்களுக்கு ..,
      மீண்டும் ஒரு முன் முன் எச்சரிக்கை .மீண்டும்  இது ஒரு சுய புராண படலம் .விழி பிதுங்கபவர்கள் தெரித்து ஓடி விடுங்கள் .கோவையில் அனைத்து காமிக்ஸ் பறி கொடுத்து விட்டு பரிதாபத்துடன் நின்ற நான் இரண்டே மாதத்தில் மீண்டும் ஒரு காமிக்ஸ் அட்டை பெட்டி உடன் சேலம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம் .(ஆம்மாம் ....பெரிய லார்கோ பிளாஸ் பேக் ..மண்டையில் மறந்து போகாமல் இருக்க என்று முனகினால் நான் பொறுப்பல்ல )இரண்டே மாதத்தில் மீண்டும் பல அரிய லயன் ,முத்து சேர்த்த கதையை சொல்லாமல் சேலம் வந்து என்ன பயன் ..?
         ஏற்கனவே சொன்னபடி ,அனைத்து காமிக்ஸ் புத்தங்களை இழந்ததாலும் ,பள்ளி ஆண்டு விடுமுறை விட்டபடியாலும் புத்தங்களை சேகரிக்க மூளை மீண்டும் வேலை செய்தது .கைவசமுள்ள சிற்சில காமிக்ஸ் புத்தங்களையும் ,பாதி விலைக்கு வாங்கிய சில நாவல்களையும் ,(அப்போதிய வயதில் நாவல் படிக்க ஆரம்பித்த காலம் (பயந்து கொண்டே ),அனைத்து புத்தங்களையும் அம்மா ,அப்பாவிற்கு தெரியாமல் ஒளித்து வைப்பது தனி கலை )நண்பி வசந்தி இடம் உள்ள புத்தங்களையும் சேகரித்து ரேஸ் கோர்ஸ்  குடியிருப்பு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரு புத்தக ஸ்டாலை திறந்தோம் .கடைக்கு மூல தனம் கையில் வைத்திருந்த சில புத்தங்களும் ,ஒரு முழு நீள கயிறும் (முழு நீள கையறு என்றதும் கற்பனையை தட்டாதீர்கள் ).மைதானத்தின் ஓரத்தில் உள்ள இரண்டு மரங்களுக்கும் இடையே அந்த கையரை கட்டி எங்கள் கைவசமுள்ள புத்தங்களை தொங்க விட்டோம் .புக் ஸ்டால் ரெடி .கோட்டர்சில் 200 கும் மேல் உள்ள குடி இருப்பாலும் ,அங்கே உள்ள ஒரே ஒரு புத்தகக்கடை இது மட்டுமே என்பதாலும் ,அப்போது எல்லாம் பொழுது போக்கு பொதிகையின் வெள்ளி இரவு ஒளியும் ஒலியும் ,ஒரே ஒரு திரை படம் என்பதாலும் நாங்களே எதிர் பார்க்காத வரவேற்பு .
          புத்தகம் அனைத்தும் பாதி விலைக்கு (நாங்கள் வாங்கியதும் பாதி விலைக்கு தான் ),இரண்டு புத்தகங்கள் கொடுத்தால் ஒரு புத்தகம் ,லயன் &முத்து காமிக்ஸ்ஒன்று  கொடுத்தால்  இரண்டு நாவல்கள் என்ற அதிரடி தள்ளுபடி எங்கள் புக் ஸ்டாலை தூள் படுத்தியது .அப்பொழுது தான் பல பெண் மணிகளும் நமது காமிக்ஸ் அடிமைகள் என்பதை கண்டு கொண்டோம் .பல பெண்கள் தங்களிடம் உள்ள காமிக்ஸ்களை கொடுத்து விட்டு நாவல்களை வாங்கி விட்டு சென்றார்கள் .(எங்களிடம் காமிக்ஸ் கேட்டால் மறைத்து விடுவோம் ).எங்கள் கடையின் வரவேற்பு பல நண்பர்களை பிஸ்னெஸ் பார்ட்னர் ஆக கெஞ்சியதும் ,ஒரு சிலரை போட்டி கடை வைக்க தூண்டியதும் தனி கதை .அந்த இரண்டு மாத "தொழில் அதிபர் "முடிவில் கிடைத்தது தான் மீண்டும் பல அரிய லயன் ,முத்து ,ராணி ,திகில் போன்ற காமிக்ஸ்களும் ,100,150 ரூபாய் சில்லறை காசுகளும் .(அப்பொழுது அந்த பணத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது ).புத்தங்களையும் ,பணத்தையும் இருவரும் ஆளுக்கு பாதியாக பகிர்ந்து கொண்ட சில நாள்களில் தான் அவர் வேறு  இடத்திற்கு குடி மாறியதும் ,நான் சேலம் வர நேர்ந்ததும் .
                 சேலம்  நான் குடி வந்ததும்  தேட ஆரம்பித்த முதல் இடம் பழைய புத்தக கடைகள் தான் .அப்படி தார மங்கலம் பகுதியில் இருந்தது தான் "திலகா பாட்டு புத்தக நிலையம் " .அங்கேயும்  பல காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்க  ஆரம்பித்தன .(அதர்காக இப்பொழுது தார மங்கலம் ஓடி வர வேண்டாம் நண்பர்களே .நான் சொல்லுவது 10 ,12 வருடத்திற்கு முன் .இப்போது அங்கே இருப்பது  இண்டியன் ஓவர் சீஸ் பேங்க் ) அங்கே பாதி  காமிக்ஸ் புத்தகங்களும் ,சேலம் வள்ளுவர் சிலை அருகே உள்ள பழைய புத்தக மார்கெட் லும் புத்தகங்களை சேகரித்தேன் .ஆனால் அப்பொழுதும் கை காசு பற்றா குறை தான் .10 புத்தகம் இருந்தால் 3,4 புத்தகம் மட்டுமே வாங்க வேண்டிய  நிலை .அதுவும் அட்டை படத்தில் மாயாவி ,ஸ்பைடர் இருந்தால் அதை  மட்டுமே வாங்கி விட்டு மற்றதை விட்டு விடுவேன் .சேலம் பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் திரை அரங்கு அதிகம் .ஒவ்வொரு திரை அரங்கிற்கும் வாசல் அருகே தள்ளு வண்டியில் புத்தக கடை இருக்கும் அப்பொழுது .அனைத்திலும் காமிக்ஸ் பாதி விலைக்கு கிடைத்தது .ஆனால் கோயம்புத்தூர் பாச்சா  (சுடுவது )இங்கே  பலிக்க வில்லை .காசு இருந்தால் மட்டுமே காமிக்ஸ் வாங்க முடியும் என்ற சூழ்நிலை .
         
            இப்படி கொஞ்ச ,கொஞ்சமாக காமிக்ஸ் புத்தகத்தை சேர்த்து வந்த சமயத்தில் தான் தா .மங்கலத்தில் உள்ள புத்தக கடையில் சில காமிக்ஸ் நண்பர்களையும் ,முக்கிய காமிக்ஸ் எதிரியையும் சந்தித்தேன் .ஒரு நாள் அந்த கடையில் என்னிடம் உள்ள நாவல்களை கொடுத்து விட்டு காமிக்ஸ் வாங்கி கொண்டு இருக்கும் போது தான் ஒரு 50 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி அறிமுகமானார் .நான் நாவலை கடையில்  கொடுப்பதை பார்த்த அவர் என்னிடம் ,கண்ணு ,எங்கிட்ட காமிக்ஸ் நிறைய உள்ளது .உன்னிடம் உள்ள நாவலை கொடுத்தால் நான் என்னிடம் உள்ள காமிக்ஸை தருகிறேன் என்றதும் என் மனசு வானத்தில் பறக்க ஆரம்பித்தது .அங்கே அருகே உள்ள அவர் இல்லத்திற்கு கூட்டி செல்ல அங்கே அவர் வீட்டில் நாவல்களும் ,காமிக்ஸ்களும் கொட்டி கிடந்தது .பிறகு அப்படி அடிக்கடி  காமிக்ஸ் வாங்கி வரும் பொழுது தான் இன்னொரு நண்பரிடமும் அதே போலே கூறி என்னிடமும் அறிமுகபடுத்தினார் .அந்த நண்பரும் அடிக்கடி  இல்லத்திற்கு வந்து படிக்க புத்தகம் வாங்கி போவார் .அப்படி ஒரு முறை நான் இல்லாத போது  வந்த அந்த காமிக்ஸ் வெறியர் மொத்தமாக பெட்டி உடன் அனைத்து புத்தகத்தையும் சுருட்டி விட்டு சென்றார் .(முற் பகல் செய்யின் பிற்பகல் விளையும் பழமொழி இப்படி தான் புரிய வேண்டுமா ..)
        அன்று நான் அழுத அழுகை பிறகு எதற்கும் அப்படி அழுததில்லை என்பது இன்று வரை கண்கூடு .இப்படி இரண்டு நாள் சோகத்தில் இருந்த நான் பழைய புத்தக கடைக்கு செல்ல அந்த பெண்மணியும் கடைக்கு வந்தார் .நான் அவரிடம் வினவு வதற்கு முன் அவசரமாக அவர் என்னிடம் ,  "கண்ணு ..உங்கூட ஒரு பையன்  வந்து புக்கு வாங்கிட்டு போவானே .அவன் அட்ரெஸ் உனக்கு தெரியுமா "என்று வினவ  ..,என்னடா நாம கேக்க வேண்டிய கேள்வியை இவங்க கேக்குறாங்க என்று முழித்து "ஏங்க்கா " ன்னு  நான் கேட்டா ...உன்கூட வந்து காமிக்ஸ் வாங்கிட்டு போற பையன்  நான் ரெண்டு நாளா ஊர்ல இல்லாததை தெரிந்து பூட்டை உடைத்து என்கிட்ட இருந்த எல்லா காமிக்ஸ்  புத்தகத்தையும் தூக்கிட்டு போய்ட்டான்பா .பாத்தா சொல்லுப்பா ..,ன்னு சொல்ல எனக்கு தலை சுற்றியது .(அப்பவும்  மனசுக்குள் ஒரு ஆறுதல் .அப்பா ..நம்ப வீட்டு பூட்டு தப்பியது .நான் கதவை  தொறந்து தானே வைத்திருந்தன் .)நானும் என்னோட சோக கதையை சொல்லிட்டு ..நீங்க பாத்தா எங்கிட்ட சொல்லுக்கா ..நானும் சொல்லிட்டு வந்தேன்  .
           இப்படி மீண்டும் எல்லா புத்தகத்தையும் பறி கொடுத்து விட்டு தவித்து கொண்டு நின்றேன் .இந்த சமயத்தில் பள்ளி படிப்பு முடித்து விட்டு பெட்ரோல் பங்கில் கேசியர் பணிக்கு செல்ல கையில் பண புழக்கம்  அதிகமாய்ற்று .அந்த சமயம் தாரமங்கல புத்தக கடை இல்லாமல் போக சேலம் வாரம் ஒருமுறை சென்று வாங்க ஆரம்பித்தேன் .இந்த சமயம் பார்த்து சேலத்து கடை காரர்களுக்கு என்ன வந்ததோ தெரிய வில்லை .இரண்டு ரூபாய் புத்தகத்தை 40 ரூபாய் ,50 ரூபாய் என்று விலை வைக்க அதிகம் புத்தகம் வாங்க முடிய வில்லை .(அது இப்போது 300,400 ஆனது அதை விட கொடுமை ).
             இந்த சமயத்தில் தான் எனது தாய் வழி உறவினர் நீ இந்த வயசுல வேலைக்கு போறது போதும் ,படிக்கிற வழிய பாரு னு "சிதம்பரம் "கூட்டி சென்றார் .இரண்டு வருட சிதம்பர ஜாகை யில் எனது காமிக்ஸ் பயணமோ வேறு வழியில் சென்றது .
                                             (சேலம் படலம் முற்றும் )


பின்குறிப்பு 1 : "டேய் ..நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடகாரா ..என்னமோ பாக ,பாகமா போட்டுட்டு வர ..?மனசுல என்ன "சிங்கத்தின் சிறு வயது "ஆசிரியர் ன்னு நினைப்பா ..? அப்படின்னு திட்டாதீர் நண்பர்களே ..அவர் அளவுக்கு எல்லாம் நான்" வொர்த் "இல்லன்னு விண்வெளி ஜீவ ராசிகளுகே கூட தெரியும் .கண்டிப்பா அடுத்த பாகத்துல முடித்து விடுகிறேன் .

பின் குறிப்பு 2 :பதிவுல படமே இணைக்க வில்லைய  என்று வினவும் நண்பர்களுக்கு ..,இணைத்தால் விஸ்வா சார் போல டக்கரா போடணும் .இல்லேன்னா கம்முன்னு கிடக்கணும்  .,என்ற நினைப்பால் நோ படம் .

பின் குறிப்பு 3: இப்படி கஷ்டப்பட்டு .கஷ்டப்பட்டு புத்தகத்தை சேர்த்து மொத்தமா ஒவ்வொரு முறையும்  தூக்கி கொடுத்துட்டு வரும் என்னை பார்த்து ..,பரிதாப பட்டு 2,3 காப்பி வைத்திருக்கும் நண்பர்கள் எனக்கு புத்தகம் கொடுக்க மனது துடிக்கலாம் :-).அவர்கள் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளலாம் .கூச்ச பட வேண்டாம் .
                                 நன்றி ...

17 கருத்துகள்:

  1. //பதிவுல படமே இணைக்க வில்லைய என்று வினவும் நண்பர்களுக்கு ..,இணைத்தால் விஸ்வா சார் போல டக்கரா போடணும் .இல்லேன்னா கம்முன்னு கிடக்கணும் .,என்ற நினைப்பால் நோ படம்//

    பரணி அண்ணா,

    இந்த கமெண்ட்டில் வஞ்சப் புகழ்ச்சி அணி எதுவும் இல்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஞ்ச புகழ்ச்சியா ...? அப்படினா என்ன சார் ?
      நான் சொல்வது எல்லாம் உண்மை .உண்மையை தவிர ....

      நீக்கு
    2. அடுத்தவரை மனதிலிருந்து பாராட்ட உண்மையிலேயே நல்ல மனம் வேண்டும்.

      நன்றி பரணி சார்

      மனமார்ந்த வாழ்த்துக்கள்

      நீக்கு
  2. பரணி அண்ணா,

    உண்மையிலேயே மிகவும் காமெடியாகவும் கஷ்டமாகவும் (சோதனை + வேதனை) இருக்கிறது உங்களது காமிக்ஸ் படலங்கள்.

    ஆகையால் அதனை தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் சோதனையும் ..,வேதனையும் ..அவ்வளவு தமாஷாவா இருக்கு ...சார் ..:-) அப்படினா ஓகே .;-D

      சார் ..,திரும்ப சொல்றேன் .நான் உங்களை விட 15.5 வயது சிறியவன் .மறுபடியும் அண்ணா ன்னு கூப்பிட்டா அழுதுருவேன் .

      நீக்கு
    2. பரணி அண்ணா,

      அப்போ உங்களுக்கு என்ன 17.5 வயசா? இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணா.

      நீக்கு
  3. சிறு வயதில் நீங்கள் இந்தாளவு புத்தகங்கள் படித்ததற்கு கொடுத்துவைத்தவர். நான் இருந்த ஊரில் இந்த அளவு புத்தகங்கள் கிடைத்ததில்லை. ராணி காமிக்ஸ் மாட்டுமே படிக்க கிடைத்தது. சென்னை வந்தபிறகுதான், அன்றைய நாளில் வெளிவந்த காமிக்ஸ் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஒரு புத்தகத்தையும் கூட சேகரிக்க முடியவில்லை. லயன் மற்றும் முத்து காமிக்ஸ் அன்றைய நாட்களில் மேட்டுபாளையம் செல்லும்போது மாட்டுமே படிக்க கிடைத்தது. 1994 பிறக்கு கோவையில் இருந்தாலும், பழைய புத்த கடைகளில் தேடியபொழுது கிடைக்கவில்லை. அதன் பின்பு தேடுவதை விட்டுவிட்டேன். இப்பொழுதும் தேடுவதுல்லை. ஆனால் இணையத்தில் கிடைத்தால் விடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே ..என்னை போலவும் ,உங்களை போலவும் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் புத்தக கடையை (பழைய ) தேடி அலைந்த அனுபவம் உள்ளவர்கள் தானே நண்பரே ..

      நீக்கு
  4. நன்றாக எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள் .

    பதிலளிநீக்கு
  5. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே... உங்களது எழுத்து நடை உங்களிடம் நேரில் பேசுவது போலவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் அனுபவத்தில் இருந்து, காமிக்ஸ் உலகின் கருப்பு பக்கங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து எழுதுங்கள். என் வீட்டில் ராணி காமிக்ஸ் மட்டுமே வாங்குவார்கள். லயன் என் நண்பன் P Z சாகுல் ஹமீது மூலம் தான் கிடைக்கும். அது என் எல்லா நண்பர்களின் கைக்கும் போய் ஒரு ரவுண்டு வரும். அப்படிதான் நண்பர்கள் தயவில்தான் படித்தேன். காமிக்ஸ் வெறிதான் உங்கள் நண்பரை அப்படி செய்ய தூண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நண்பரே ...
      எனவே தான் அவரை "காமிக்ஸ் வெறியர் "என குறி பிட்டேன் . :-)

      நீக்கு
  7. ரேஸ்கோர்ஸ் காலனி என்றதும் மதுரையோ என்று பார்த்தேன். கோவையா? நானும் உங்கள் எல்லோரையும் போல காமிக்ஸ் பிரியன்தான். ஐம்பது பைசாவுக்கு வாங்கிய ஒரிஜினளைத் தொலைத்து இப்போது 100 ரூபாய்க்கு நகல்களை வாங்குபவன்!!! :)))

    பதிலளிநீக்கு