நண்பர்களே ...வணக்கம் ...
நலம் ..,நலமா ..?
போன வாரமே வந்து இருக்க வேண்டிய இந்த பதிவு சில காரணங்களால் தள்ளி விட்டது .தீபாவளிக்கு வந்த நமது காமிக்ஸ் மலர்கள் இரண்டில் கிராபிக் நாவல் ஆன " ஒரு சிப்பாயின் சுவடுகளில் " ஒன்று .அந்த இதழை பற்றிய எனது பக்க பார்வை (மட்டும் ) இங்கே காணலாம் . முதலில் இந்த புத்தகத்தை படிக்காமல் முழுவதுமாக புரட்டி பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம் தான் ஏற்பட்டது .காரணம் ஆசிரியரின் அந்த நீ......ண்ட ஹாட் -லைன் .இணையத்தில் வரும் பலருக்கு அதில் பாதி ஏற்கனவே அறிந்த செய்தி தான் என்றாலும் புத்தகத்தில் படிக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான் .நமக்கே இப்படி என்றால் இணையம் வராத பலருக்கு எப்படி இருக்கும் .?அதுவும் 2014 விளம்பரத்துடன் வந்த அந்த இதழை பாராட்டாமல் இருக்க முடி யுமா என்ன ?
அதே சமயம் டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் வந்த அதே அட்டைப்பட மங்கள் இதிலும் வந்தது வருத்தமே .இணையத்தில் வந்த அட்டைபடம் பாராட்டை பெற்ற போதும் புத்தகத்தில்...... நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் ஓவியம் மங்கலாக வந்ததில் புத்தகத்துக்கு ஒரு மாற்று குறைவே ..!இதன் அட்டைபடம் கீழே காணலாம் .
இணையத்தில் வந்த இந்த அட்டைப்படம் புத்தகத்திலும் இதே போல வந்திருந்தால் இன்னும் மெருகு கூடி இருக்கும் என்பது உண்மை .
அடுத்து கதைக்கு செல்லலாம் .முழுவதுமாக சொல்லலாம் தாம் .ஆனால் படிக்காதவர்களும் படிக்கலாம் என்றாலும் படிக்காதவர்கள் பத்தி ,பத்தி யாக தாண்டி செல்லும் நிலை இருப்பதால் அதன் கரு மட்டும் .:-). முழுவதும் கதையை படிக்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக நண்பர் பெங்களூர் கார்த்திக் அவர்களின் "blade beedia .blogs pot .com ."என்ற இணைய தள முகவரிக்கு சென்றால் காணலாம் .
வீட்டிலும் ,பணியிலும் ,பொருளாதாரத்திலும் பின் தங்கி விட்ட ஒரு தொலை காட்சி நிருபர் இழந்த புகழை மீட்டெடுக்க... என்ன ஆனார் என்றே தெரியாத ஒரு படை வீரனை தேடி செல்கிறார் .அதற்காக அவர் படும் இன்னல்கள் ,பொருளாதார இழப்பு மற்றும் அந்த படை வீரனின் கதி என்ன ஆயிற்று ,கடைசியில் அந்த நிருபரின் கதி என்ன ஆயிற்று என்பது புத்தகம் வாங்கி படித்தால் தாங்கள் அறிந்து கொள்ளலாம் .உண்மையில் இந்த கதையை நான் முதலில் ஆர்வமாக தான் படிக்க ஆரம்பித்தேன் .காரணம் ஆசிரியரின் "இது அழுகாச்சி காவியம் அல்ல " என்ற முன்னுரை தான் .ஆனால் அந்த படை வீரனுக்கு ஏற்பட்ட நிலை ,நிருபனுக்கு ஏற்படும் நிலை என கதை ஒரு மாத்ரி "சோகத்தை "நோக்கி படை எடுக்க நான் மூலையை நோக்கி படை எடுக்க தொடங்கினேன் .என்ன தான் "மாறுபட்ட படைப்பு "என்றாலும் கிராபிக் நாவல் என்றால் "அழுகாச்சி காவியம் "தான் என்ற என் மன நிலை 100 சதவீதம் உண்மை தான் என்பதை நிருபத்திதது .
ஆனால் இப்பொழுது ஆசிரியர் அறிவித்த "கிராபிக் நாவல் "வரிசைக்கான கதைகளின் விளம்பர அறிவிப்பு எனது எண்ணத்தை மாற்றி விடும் நிலைமையில் இருப்பதால் அடுத்த கிராபிக் நாவலுக்கான கதைகளை ஆவலுடன் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையையும் இங்கே சொல்லி விடுகிறேன் .எனது எதிர் பார்ப்பு உண்மையாகுமா அல்லது கனவாகுமா என்பது அடுத்த கிராபிக் நாவலில் வரும் கதையை பொறுத்து தான் அமையும் .
அதே சமயம் கிராபிக் நாவலின் ஆதரவாளர்கள் எனது நிலை பாட்டை ஆசிரியர் வசம் கூறும் பொழுது என் மேல் வருத்தம் கொள்வது அறிய முடிகிறது .சோக கதை என்றால் அது உனக்கு நடந்ததா என்ன ? படித்து விட்டு விட்டு விடுவது தானே எனவும் என்னலாம் .என்னை பொறுத்த வரை பகலில் எவ்வளவு கஷ்ட பட்டாலும் இரவில் அமைதி யான மன நிலையில் உறங்க நினைக்கிறன் .நான் பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் தான் படிக்க ஆரம்பிக்கிறேன் .அப்பொழுது நாம் ஒரு சிறந்த கமர்சியல் கதையோ ,அல்லது ஒரு காமெடி கதையோ படிக்கும் பொழுது உறங்கும் முன்னரோ ,உறங்கிய பின்னரோ ஒரு வித ஆனதத்தில் உறங்க முடிகிறது .அதே சமயம் "ஒரு அழுகாச்சி காவியத்தை " இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு .எனவே தான் எனது எதிர்ப்பை உடனடியாக கூறி விடுகிறேன் .நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன .அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் "புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா ?
மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ......
நலம் ..,நலமா ..?
போன வாரமே வந்து இருக்க வேண்டிய இந்த பதிவு சில காரணங்களால் தள்ளி விட்டது .தீபாவளிக்கு வந்த நமது காமிக்ஸ் மலர்கள் இரண்டில் கிராபிக் நாவல் ஆன " ஒரு சிப்பாயின் சுவடுகளில் " ஒன்று .அந்த இதழை பற்றிய எனது பக்க பார்வை (மட்டும் ) இங்கே காணலாம் . முதலில் இந்த புத்தகத்தை படிக்காமல் முழுவதுமாக புரட்டி பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம் தான் ஏற்பட்டது .காரணம் ஆசிரியரின் அந்த நீ......ண்ட ஹாட் -லைன் .இணையத்தில் வரும் பலருக்கு அதில் பாதி ஏற்கனவே அறிந்த செய்தி தான் என்றாலும் புத்தகத்தில் படிக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான் .நமக்கே இப்படி என்றால் இணையம் வராத பலருக்கு எப்படி இருக்கும் .?அதுவும் 2014 விளம்பரத்துடன் வந்த அந்த இதழை பாராட்டாமல் இருக்க முடி யுமா என்ன ?
அதே சமயம் டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் வந்த அதே அட்டைப்பட மங்கள் இதிலும் வந்தது வருத்தமே .இணையத்தில் வந்த அட்டைபடம் பாராட்டை பெற்ற போதும் புத்தகத்தில்...... நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் ஓவியம் மங்கலாக வந்ததில் புத்தகத்துக்கு ஒரு மாற்று குறைவே ..!இதன் அட்டைபடம் கீழே காணலாம் .
அட்டைப்படம் |
அடுத்து கதைக்கு செல்லலாம் .முழுவதுமாக சொல்லலாம் தாம் .ஆனால் படிக்காதவர்களும் படிக்கலாம் என்றாலும் படிக்காதவர்கள் பத்தி ,பத்தி யாக தாண்டி செல்லும் நிலை இருப்பதால் அதன் கரு மட்டும் .:-). முழுவதும் கதையை படிக்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக நண்பர் பெங்களூர் கார்த்திக் அவர்களின் "blade beedia .blogs pot .com ."என்ற இணைய தள முகவரிக்கு சென்றால் காணலாம் .
வீட்டிலும் ,பணியிலும் ,பொருளாதாரத்திலும் பின் தங்கி விட்ட ஒரு தொலை காட்சி நிருபர் இழந்த புகழை மீட்டெடுக்க... என்ன ஆனார் என்றே தெரியாத ஒரு படை வீரனை தேடி செல்கிறார் .அதற்காக அவர் படும் இன்னல்கள் ,பொருளாதார இழப்பு மற்றும் அந்த படை வீரனின் கதி என்ன ஆயிற்று ,கடைசியில் அந்த நிருபரின் கதி என்ன ஆயிற்று என்பது புத்தகம் வாங்கி படித்தால் தாங்கள் அறிந்து கொள்ளலாம் .உண்மையில் இந்த கதையை நான் முதலில் ஆர்வமாக தான் படிக்க ஆரம்பித்தேன் .காரணம் ஆசிரியரின் "இது அழுகாச்சி காவியம் அல்ல " என்ற முன்னுரை தான் .ஆனால் அந்த படை வீரனுக்கு ஏற்பட்ட நிலை ,நிருபனுக்கு ஏற்படும் நிலை என கதை ஒரு மாத்ரி "சோகத்தை "நோக்கி படை எடுக்க நான் மூலையை நோக்கி படை எடுக்க தொடங்கினேன் .என்ன தான் "மாறுபட்ட படைப்பு "என்றாலும் கிராபிக் நாவல் என்றால் "அழுகாச்சி காவியம் "தான் என்ற என் மன நிலை 100 சதவீதம் உண்மை தான் என்பதை நிருபத்திதது .
ஆனால் இப்பொழுது ஆசிரியர் அறிவித்த "கிராபிக் நாவல் "வரிசைக்கான கதைகளின் விளம்பர அறிவிப்பு எனது எண்ணத்தை மாற்றி விடும் நிலைமையில் இருப்பதால் அடுத்த கிராபிக் நாவலுக்கான கதைகளை ஆவலுடன் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையையும் இங்கே சொல்லி விடுகிறேன் .எனது எதிர் பார்ப்பு உண்மையாகுமா அல்லது கனவாகுமா என்பது அடுத்த கிராபிக் நாவலில் வரும் கதையை பொறுத்து தான் அமையும் .
அதே சமயம் கிராபிக் நாவலின் ஆதரவாளர்கள் எனது நிலை பாட்டை ஆசிரியர் வசம் கூறும் பொழுது என் மேல் வருத்தம் கொள்வது அறிய முடிகிறது .சோக கதை என்றால் அது உனக்கு நடந்ததா என்ன ? படித்து விட்டு விட்டு விடுவது தானே எனவும் என்னலாம் .என்னை பொறுத்த வரை பகலில் எவ்வளவு கஷ்ட பட்டாலும் இரவில் அமைதி யான மன நிலையில் உறங்க நினைக்கிறன் .நான் பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் தான் படிக்க ஆரம்பிக்கிறேன் .அப்பொழுது நாம் ஒரு சிறந்த கமர்சியல் கதையோ ,அல்லது ஒரு காமெடி கதையோ படிக்கும் பொழுது உறங்கும் முன்னரோ ,உறங்கிய பின்னரோ ஒரு வித ஆனதத்தில் உறங்க முடிகிறது .அதே சமயம் "ஒரு அழுகாச்சி காவியத்தை " இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு .எனவே தான் எனது எதிர்ப்பை உடனடியாக கூறி விடுகிறேன் .நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன .அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் "புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா ?
மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ......