நண்பர்களுக்கு , சென்ற எனது அறிமுக பதிவில் வாழ்த்தி சென்ற அனைத்து அன்பர்களுக்கும் ,வாசித்து மட்டும் சென்ற நண்பர்களுக்கும் ,பார்த்து நொந்து கொண்டே போன நண்பர்களுக்கும் எனது அன்பான நன்றிகள் . நமது ப்ளாக் இன் தலைப்பே காமிக்ஸ் இல் இருப்பதால் காமிக்ஸ் நண்பர்களே அதிகம் வருவார்கள் என்பது உறுதி .எனவே காமிக்ஸ் இன் சுவையை நாம் நன்கு அறிந்திருப்போம் .அதே சமயம் "ஹே ...நீயும் காமிக்ஸ் படிப் பாயா ?" என்ற ஆச்சேரிய பார்வையை விட "இன்னுமா இந்த பொம்மை புக்கெல்லாம் படிக்கிறாய் ! என்ற கேலி பார்வையை தான் நாம் அதிகம் சந்திதிருப்போம் .அப்படி கேற்கும் நண்பர்களுகு இனி நாம் பதில் சொல்லி அதை அவேர்களுகு புரிய வைக்கவும் முடியாது ,ரசிகக வைக்கவும் முடியாது அவர்களுகு நாம் பதில் சொல்லி நமது ENERGY யை வேஸ்ட் செய்வதை விட மௌனமே சிறந்த பதில் ஆக இருக்கும் ஆனால் அப்படிப்பட்ட நண்பர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் .இனி உங்களால் இந்த காமிக்ஸ் என்னும் அறிய சுவையை அறிய முடியாது .எங்களின் இந்த சிறு காமிக்ஸ் உலகத்தை புரிந்து கொள்ளவும் முடியாது ஆனால் தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு இந்த காமிக்ஸ் என்னும் அழகான புத்தக நண்பனை அறிமுகபடுதுங்கள் .அது அவர்களின் கற்பனை சக்தி ,சிந்தனை சக்தியையும் அதிகரிக்க செய்யும் .அதை விட்டு அவர்கள் சுட்டி டிவி யும் ,கார்ட்டூன் சேனல் ஐயும் பார்த்து ரசிப்பதை நீங்கள் ரசித்து கொண்டு இருந்தால் அவர்களின் பின் பொழுது வயது ரசிக்கும் படி இருக்காது என்பதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே. தமிழில் காமிக்ஸ் என்னும் உலகமே கனா காலமாகி விடுமா என்ற நிலையில் ,காமிக்ஸ் என்னும் ஒரே அழகிய குழந்தையும் தட்டு தடுமாறி தவழ்ந்து வந்த போதும் ,திடீர் ,திடீரென காணமல் நமக்கு பயம் காட்டிய அந்த குழந்தை ,.....,நான் யானை அல்ல ,யானை விழுந்தால் எழுவதற்கு நேரமாகும் நான் குதிரை டக்கென எழுவே ன் .என்ற கணக்காய் திடீர் எழுச்சியாய் , புத்தம் புது காளையாய் 2012 முதல் புது அவதாரம் எடுத்த அந்த குழந்தை தான் நமது விஜயன் சாரால் பெற்றடது ,வளர்த்த நமது LION .MUTHU COMICS . இப்போது மாதம் தவறாமல் ரூபாய் 100 விலை இல் முழு வண்ணத்தில் அயல் நாட்டு தரத்தில் ,பெரிய சைஸ் இல் வரும் இந்த காமிக்ஸ் புத்தகத்தை வளர வைப்பது நமது க டமை .படிக்கும் நண்பர்கள் தமது மற்ற நண்பர்கள் ,உறவினர்கள் அணை வறிடுமும் ,படிக்காத நண்பர்கள் தமது வாருசு களு காகவும் அறிமுக படுத்துங்கள் .இது விஜயன் சாருக்கு மட்டுமல்ல ,காமிக்ஸ் உலகத் தி நரகே பெரும் உதவி .ஒவ்வொரு புத்தக கடையிலும் நமது காமிக்ஸ் தொங்க ,குழந்தைகள் அதை வாங்கி தர சொல்லி அடம்பிடிக்கவும் ,ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் காமிக்ஸ் வாங்கி படிப்பதை பெருமை யாக நினைக்கும் காலமும் ,இனி காமிக்ஸ் என்பது கனா காலமல்ல ,வளரும் காலம் தான் என நிருபிக்கும் நேரம் வந்து விட்டதா ? காத்திருப்போம் தோழர்களே ....!
வாழ்த்துக்கள் பரணி, அப்படியே பதிவுகளுக்குள் படங்களையும் சேருங்கள். பதிவு களைகட்டும்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பா ...விரைவில் படங்களை இணைத்து விடுகிறேன் .
நீக்குA simple and sensational post!
பதிலளிநீக்குநீங்கள் கூறியதைப்போல, ஜப்பானில் காமிக்ஸ் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை இந்தியாவிலும் (குறைந்தபட்சம் தமிழ்நாட்டிலாவது) உருவாகுமானால் நம் சந்ததியினராவது கொடுத்துவைத்தவர்களாவார்கள்.
காத்திருப்போம்...
முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்! பிழைகள் போகப் போக சரியாகிவிடும்.
வருகைக்கு நன்றி நண்பா ...பதிவு எழுத எழுத POWER CUT அடிக்கடி.பிழைகளை கவனிக்க முடியவில்லை.அடுத்த பதிவில் நிவர்த்தி செய்து விடுகிறேன் நண்பா.
நீக்குகடுகு சிருதாலும் காரம் குறையவில்லை நண்பரே.
பதிலளிநீக்குகண்டிப்பாக தமிழ் காமிக்ஸின் வருகாலம் பிரகாசமாக உள்ளது.
வருகைக்கு நன்றி நண்பா ...உங்கள் வாக்கு பலிக்கட்டும் .
நீக்குகலக்கும் அன்பு நண்பா! அட்டகாசமாக தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து உள்ளீர்கள். நன்றிகள் பல! என் மகன் லக்கி லூக் ரசிகன். நன்றாக ரசிக்கிறான். என்ன ஒரு குறை எனில் அவனுக்கு கதை சொல்ல நேரமில்லாமல்தான் இங்கே அலுவலகம் வந்து உங்க கூடவாவது அரட்டை அடிக்கிறேன். இதற்கு ஒரு வழி அமைந்ததே என் பாக்யம். அருமையான பல கருத்துகளை சொல்லி இருக்கீங்க! இதில் படிக்கும் - வாசிப்பு பழக்கம் குறித்து நன்றாகவே எடுத்து காட்டி இருக்கீங்க. இன்னும் பல விஷயங்களை நீங்க பகிர்ந்து கொல்ல ஹி ஹி ஹி கொள்ள போவதற்காக எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பா ...உங்கள் மகனுக்கு மட்டுமல்ல .,இங்கு இப்பொழுது யாரும் யாருக்கும் கதை சொல்ல நேரம் இல்லை.காலம் மாறுமா ?
நீக்குகாலம் மாற வேண்டும் என்ற உங்க நினைப்பு வெறும் கானல் நீரல்ல! அது அனைவருக்கும் அருந்த தரும் அமுதம் நண்பா! நல்லதை யாரும் தடுக்க முடியாது. கெட்டதை யாரும் வளர்க்க முடியாது. உங்க ஆசை கண்டிப்பாக நிறைவேறும்!!
நீக்குஹாய் ,பரணி , தாரமங்கலம் பரணிதரனா நீங்கள் ?,
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி மருத்துவரே.. அந்த தாரமங்கலம் பரணி நானே தான் : )
நீக்குGood post
பதிலளிநீக்குvalthukal...
வருகைக்கு நன்றி நண்பா ...
நீக்குவாழ்த்துக்கள். எழுத்து பிழையை மட்டும் கொஞ்சம் சரி செய்யுங்கள். படங்களையும் இணையுங்கள். வோர்ட் வெர்பிகதிஒநை எடுத்து விடுங்கல். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குVIRAIVIL AVANA SAITHU VIDUGIRIEN NANBARAY...NANDRI.
பதிலளிநீக்கு